செவ்வாய், 18 நவம்பர், 2025

89.




திருமங்கையாழ்வார்                                                                                      பெரிய திருமொழி 

பேரானைக் குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும்
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே.        1399 

      திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக உறைபவன்திருக்குறுங்குடியில் அழகிய நம்பியாக அருள் பாலிப்பவன்திருத்தண்காலில் தண்காலப்பனாக வாசம் செய்பவன்திருக்கரம்பனூரில் புருஷோத்தமனாகத் திகழ்பவன்முத்துக்களைக் கொண்ட கரிய நிறமான ஏழு கடல்களையும்ஏழு மலைகளையும்ஏழு உலகங்களையும்ஊழிக்காலத்தில் உண்டு உமிழ்ந்தவனை நான் தென்னரங்கத்தில் தரிசித்தேன் என்கிறார்.
      உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் நம் மீது வைத்துள்ள கருணையால் பல திருத்தலங்களில் அருள் பாலிக்கின்றார். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நமது மனம் திருத்தலங்களில்தான் இறைவனுடன் சங்கமித்து ஒருமுகப்படுவதற்கான நிலை ஏற்படுகின்றது. அவ்விதம் ஒருமுகப்படும் போது இறைவனே நம் மனதில் கோயிலாகக் குடிகொள்வான். அத்தகைய ஒரு நிலை வரும்வரை நாம் திருக்கோயில்களுக்கு செல்வது அவசியம் என்று ஆழ்வார் கூறுகிறார்.         

திருமங்கையாழ்வார்                                                                                 திருநெடுந்தாண்டகம் 

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப்
      பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
     சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
     தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மைஎன்ன
     நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!       2068 

      மென்மையான இளம் தனங்கள் நிறம் மாறிப் பசலை என்னும் நோய் பூத்திருக்கின்றன. கயல் விழிகளில் கண்ணீர் ததும்பி இருக்கிறது. அடிக்கடி பிரமை பிடித்தது போல் தனியே நிற்கிறாள். சிவந்த கால்களையுடைய ஆண் புறாக்கள் தங்கள் பேடைகளோடு மகிழும் ஒலி கேட்டு உடல் உருகிஅவள் தன்னோடு தொடர்பு கொண்டதை எண்ணி பகவான் எழுந்தருளியிருக்கும் திருத்தண்காவையும்குளிர்ந்த திருக்குடந்தையையும்திருக்கோவலூரையும்  பாடி நடனமிடும் குரலைக் கேட்டுப் பெண்ணே! வாய் விட்டு நம் மணாளனை அழைப்பது நம் குலத்திற்கு ஆகாது என்று கூறி திருநறையூரைப் பாட மறந்ததேனோ? என்ற  பொருளில் பகவானை நினைத்து தன் பெண் புலம்புவதை திருத்தாயார் நிலையில் ஆழ்வார் பாடுகிறார். 

பூதத்தாழ்வார்                                                                                            இரண்டாம் திருவந்தாதி 

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம் .          2251 

      அழகிய தஞ்சை மாமணிக்கோயில்சிறந்து விளங்கும் திருவரங்கம்இயற்கை சூழல் நிறைந்த திருத்தண்கால்பக்தர்கள் தியானிக்கும் திருமலைஅழகிய திருப்பாற்கடல்கடல்சூழ்ந்த  திருக்கடல்மல்லைநெடிதுயர்ந்த திருக்கோவலூர்அழகிய மதில்கள் உடைய திருக்குடந்தை ஆகிய இடங்களைவிட அடியார்களின் இதயக்கமலத்தில் குடிகொள்வதே பெருமானுக்கு விருப்பம் என்று ஆழ்வார் தமது பாசுரத்தில் கூறுகிறார். 
      பகவான் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்றாலும்,  அலைபாயும் மனத்துடன் பகவானை வழிபடுதல் இயலாது என்பதால் இத்தகைய ஆலயங்கள் உருவாகின.  இத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தால் நம் மனத்திலுள்ள எதிரிகள் அழிவர். நம் மனம் அலைபாய்வதை விடுத்து ஒருநிலைப்படும். அதனால் தெளிவு பிறக்கும். தீய வினைகள் செய்யக்கூடாது என்ற வைராக்கியம் வளர்ந்து நாம் உத்தமர்களாக மாறுவோம் என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...