திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அலம் கெழு தடக்கை ஆயன் வாய்
ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? இடவெந்தை எந்தை பிரானே. 1155.
திருவிடந்தைப் பெருமானே! இப்
பெண்ணானவள் ‘கலப்பையைக் கையில் தரித்த கண்ணபிரானின் குழலோசையைக் கேட்டு என் உள்ளம்
உருகுகின்றது’ என்று கூறுகிறாள். நீர்வளம்
பொருந்திய அழகிய திருப்புட்குழி என்னும் தலத்தில் விஜயராகவனாக சேவை சாதிக்கும்
பெருமானைக் குறித்துப் பாடுகிறாள்.
‘திருநீர்மலைக்குச் செல்வோமா’ என்கிறாள். கொல்லிப் பாவை போன்ற கொடி இடையைக்
கொண்ட அழகிய தோள்களையுடையவள், இடைவிடாமல் மழை போன்று கண்ணீரைச் சொரிகின்ற என் மகள்
விஷயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தாய் கேட்பது போன்று
இப்பாசுரம் அமைந்துள்ளது.
திருத்தாயாரானவள் தன் மகள் பற்றி
வருந்திப் பாடுகிறாள். ‘கண்ணனின் மதுரமான குழலோசை என் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது.
திருப்புட்குழியின் நீர்வளத்தைப் பாடுகிறாள். திருநீர்மலை செல்ல வேண்டும் என்று
பிடிவாதமாகக் கூறுகிறாள். தனது விருப்பம் எதுவும் நிறைவேறாததைக் கண்டு
துன்புறுகிறாள். ஜடாயுவுக்கு மோட்சம் அளித்ததை எண்ணிப் பாடுகிறாள். கொல்லிமலை
கொடியிடைப் பாவையான என் மகள் படும் துன்பம் கண்டு மனம் இறங்கவில்லையே’ என்ற
கூறுகிறாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக