வெள்ளி, 28 நவம்பர், 2025

58. திருநின்றவூர்

 


திருமங்கையாழ்வர்                                                                                         பெரிய திருமொழி 

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந்                                                                                                                                         நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை                                                                                                                                                      கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத்தை                                                                                                                                                   தொத்து ஆர் சோலை
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான்                                                                                                                                                            கடல்மல்லைத் தலசயனத்தே.  1089. 

      பொல்லாத செயல்களைச் செய்வது, வயிற்றுப் பிழைப்பிற்காக பிறருக்கு அடிமையாக இருந்து பணி செய்வது, அபத்தமான உண்மைக்குப் புறம்பான தவறுகள் உள்ள சமய நூல்களை மெய்யான நூல்கள் என்று எண்ணி படித்துப் பாழாகிப் போகாமல் உய்ய வாருங்கள் என்றும், மனிதர்களே கெட்டுப் போகாமல் என் சொல்லை ஆதரியுங்கள் என்று வற்புறுத்தியும், அதை ஏற்காமல் அவர்களை விட்டொழித்தார். பத்தராவிப் பெருமான் முகம் கொடாமல் பிராட்டியுடன் சல்லாபித்து இருந்ததால் தலசயனப் பெருமானை தஞ்சம் அடையப் புறப்படுகிறார்.  திருமகள் வாக்கினால் தூண்டப்பட்ட பெருமான் தலசயனத்தில் வந்து அருள் புரிந்தார். இப்பெருமான்  எனக்குத் தந்தையானவன், என் போன்றோர் வணங்கும்படி எளியவனாய் இருப்பவன், அடியார்கள் போற்றும் வேதப் பொருளானவன். காளமேகம் போன்ற நிறமுடைய எங்கள் தலைவன் திருநின்றவூரில் முத்துத் திரள் போல் குளிர்ச்சியாய் இருப்பவன். காண்டவ வனத்தைத் தீக்கிரையாக்கிய பகவான் கடல்மல்லை பூமியில் பள்ளி கொண்டிருப்பதைக் கண்டேன் என்று கூறுகிறார் ஆழ்வார். தலசயனத்துப் பெருமானை தாம் சேவித்து ஆனந்தம் கொண்டது போன்று அனைவரும் சேவித்து ஆனந்திக்க வேண்டும் என்பதே அவரது அவாவாக உள்ளது.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...