பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
மின் அனைய நுண் இடையார் விரி
குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா முலை உணாயே. 133
மின்னலைப் போன்ற மெல்லிய இடையை
உடைய பெண்களின் விரிந்த கூந்தலின் மேல்
தேனை உண்பதற்காகப் புகுந்த வண்டினங்கள் தேனைப் பருகிய மகிழ்வில் இனிய ஓசையை
எழுப்பும். ஸ்ரீவில்லிபுத்தூரில் குடி கொண்டிருப்பவனே! உன்னைக் கண்டவர்கள் இவனைப் பெற்ற தாய் என்ன
தவம் செய்தாளோ? என்று பாராட்டிச் சொல்லும் வார்த்தைகளை எனக்களித்த ரிஷிகேசா பால்
பருக வா! என்று ஆழ்வார் அழைக்கிறார்.
மகனைப் பெற்ற நிலையில் தாய்
மகிழ்ச்சி அடைகிறாள். இந்த மகனைப் பெறுவதற்கு இவள் என்ன தவம் செய்தாளோ? என்று
மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அத்தாய் மேலும் மகிழ்ச்சி அடைகிறாள். அத்தகைய பெருமையினை கண்ணன் யசோதைக்குத்
தந்தான். வில்லிபுத்தூர் பெருமான், உலகினைக்
காக்கும் திறம் கொண்டவர். அத்தகையவன் யசோதைக்குப் பிள்ளையாகப் பிறந்திருப்பது அவள்
செய்த தவத்தின் பயனே என்று கூறலாம்.
அத்தகைய வார்த்தைகளை எனக்களித்த இருடிகேசா! பால் அருந்த வா! என்று தாய்
அழைப்பது போன்று ஆழ்வார் அழைக்கிறார்.
ஆண்டாள் நாச்சியார் திருமொழி
மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான்
தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
பொரு கயல் கண்ணினை
துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி
எடுத்த என் கோலக்
கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே !
உலகு அளந்தான் வரக்
கூவாய். 549

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக