வெள்ளி, 16 ஜனவரி, 2026

3. திருக்கரம்பனூர் - உத்தமர் கோவில்

 

திருமங்கையாழ்வார்                                                                         பெரிய திருமொழி

       

பேரானைக் குறுங்குடியெம்பெருமானை  திருதண்கா

லூரானைக் கரம்பனூருத்தமனை  முத்திலங்கு

காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் 

ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே.   1399

 

திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக உறைபவன், திருக்குறுங்குடியில் அழகிய நம்பியாக அருள் பாவிப்பவன், திருத்தண்காலில் தண்காலப்பனாக வாசம் செய்பவன், திருகரம்பனூரில் புருஷோத்தமனாகத் திகழ்பவன், முத்துக்களைக் கொண்ட கரிய நிறமான ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும், ஏழு உலகங்களையும், ஊழிக்காலத்தில் உண்டு உமிழ்ந்தவனை நான் தென்னரங்கத்தில் தரிசித்தேன் என்று கூறுகிறார் ஆழ்வார்.

        உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரம் பொருள் நம் மீது வைத்துள்ள கருணையால் பல திருத்தலங்களைக் கொண்டு அருள் பாலிக்கின்றார். ஊழிகாலத்தில் அனைத்து உலகங்களையும் உண்டும் திருப்தியடையாதவனை திருவரங்கத்தில் தரிசித்தேன். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நமது மனம் திருத்தலங்களில்தான் இறைவனுடன் சங்கமித்து ஒருமுகப்படுவதற்கான நிலை ஏற்படுகின்றது. அவ்விதம் ஒருமுகப்படும்போது இறைவனே நம் மனதில் கோயிலாகக் குடிகொள்வான். அத்தகைய ஒரு அற்புதநிலை வாய்க்கின்றவரை நாம் திருக்கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது அவசியம் என்று ஆழ்வார் கூறுகிறார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Divya Desa Pasurangal

2. திருக்கோழி - உறையூர்

  குலசேகராழ்வார்                                                                           பெருமாள் திருமொழி         அல்லி மா மலர் மங்கை...